Monday, 2 February 2015

ஆஹா 50! வீட்டுக்குறிப்புக்கள் சில

ஆஹா 50! வீட்டுக்குறிப்புக்கள் சில

மழை நாளாக இருப்பதால்மிளகாயைக் குறைத்து மிளகை அதிகம் பயன்படுத்தலாம். மழையினால் வரும் வியாதிகளைத் தடுக்க தேவையான எதிர்ப்புச் சக்தி மிளகில் உள்ளது.

தோசைக்கு மாவு அரைக்கும்போது அதில் இரண்டு உருளைக் கிழங்குகளைத் தோல் நீக்கி சேர்த்தரைக்கவும். மறுநாள் தோசை வார்த்தால்பொன்னிறமாக மிருதுவாக இருக்கும்.

தரையைத் துடைக்கும்போது வாரத்தில் ஒருநாள்தண்ணீரில் உப்பு போட்டுத் துடைக்கவும். மற்றொரு நாள் மண்ணெண்ணெய் சில துளிகள் சேர்த்துத் துடைத்தால்தரை பளபளவென்று கிருமிகள் இல்லாமல் இருக்கும்.

குழந்தைகளுக்குப் புதிய ஆடைகள் வாங்கியவுடன்டெட்டால் கலந்த நீரில் அலசிய பிறகேஅணிவிக்க வேண்டும். ரேஷஸ்அரிப்பு போன்ற தொல்லைகள் வர வாய்ப்பிருப்பதால்அதை முன்கூட்டியே தவிர்க்கலாமே!

முடி கொட்டுகிறதாவேப்பமுத்துமிளகுகருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து நல்லெண்ணெயுடன் காய்ச்சவும். இதைத் தலையில் தேய்த்துக் குளித்து வர செழித்து வளரும்.

விருந்தின்போது வெற்றிலைப் பாக்குத் தட்டில் இருக்கும் பாக்குப் பொட்டலங்களைகையால் பிரிக்க முடியாமல் சிலர் திணறுவார்கள். ஒரு சிறிய கத்திரிக்கோலைஅந்தத் தட்டில் வைத்தால் சௌகரியமாக இருக்கும்.

மூலநோயால் அவதிப்படுகிறீர்களாதுத்தி இலையை அரைத்துநெல்லிக்காய் அளவு உருட்டி காய்ச்சிய பசும்பாலில் கலந்து குடியுங்கள். நாற்பது நாள் தொடர்ந்துகாலையில் குடித்து வந் தால் மூலநோய் குண மாகும்.

உலர்ந்த பச்சைப் பட்டாணியை பவுடராக்கவும். ஒரு டீஸ்பூன் மாவில் பன்னீர் கலந்து பேஸ்ட் போலச் செய்து முகத்தில் பூசவும். காய்ந்ததும் கழுவமுகம் பளிச்சிடும்.

சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயில் நன்றாக வதக்கி அரை கப் சாதத்தில் பிசைந்து சூட்டோடு சாப் பிடுங்கள். மலச்சிக்கல்மூலம் போன்றவைக் கட்டுப்படும்.

ஏ.சி.வைத்திருப்பவர்கள் அவ்வப்போது தூசி படிதல்கேஸ் லீக் பிரச்னைகளைக் கவனித்து சர்வீஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஏசி பழுதாவ தோடு விபத்து ஏற்படவும் வாப்புண்டு.

இரவு படுக்கப் போகும் முன்பு கொட்டைகள் நீக்கிய பேரீச்சம் பழங்களைபசும்பாலுடன் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிகுடிக்கவும். நல்ல சக்தி கிடைக்கும். சத்து அதிகமுள்ள பானம் இது.

ஓமத்தை இலேசாக வறுத்துஅத்துடன் அரைப் பங்கு உப்பும்கால் பங்கு வெல்லமும் சேர்த்துகொட்டைப் பாக்களவு காலையிலும்மாலையிலும் சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.

காலை எழுந்தவுடன் இருக்கும் சுறுசுறுப்பு மதியம் இருக்காது. எனவேகாலை எழுந்தவுடன் கடினமான வேலைகளை முடித்து விட்டால்இலகுவான வேலைகளை மதியத்துக்கு மேல் செயலாம்.

சுண்டை வற்றல்மணத்தக்காளி வற்றலை வெயிலில் காயவைத்து எடுத்து வையுங்கள். இதில் உள்ள அதிகப்படியான உப்புமண் உதிர்ந்துவிடும். எண் ணெயில் வறுக்கும்போது அதிக கசடும் வராது.

ஃபேக்ஸ் மூலம் டாகுமெண்ட் வந்தால் அதனை உடனே நகல் எடுத்து வைக்க வேண்டும். ஃபேக்ஸ் எழுத்துக்கள் நாளடைவில் மங்கிவிடும்

No comments:

Post a Comment